‘அந்த பெண்தான் எங்களை ரேப் செய்தார்’; விருதுநகர் வழக்கில் முதல்வருக்கு புகார் அனுப்பிய சிறுவன்!

April 19, 2022 at 4:30 pm
pc

விருதுநகர் இளம் பெண் தங்களை கட்டாயபடுத்தி உறவுகொண்டதாக கூட்டு பாலியல் வழக்கில் கைதான சிறுவன் கொடுத்துள்ள புகார் பரபரப்பை 

விருதுநகரில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிறுவன் அந்த பெண்ணிற்கு எதிராக புகார் கொடுத்துள்ள சம்பவம் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேர் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.

முதல்வருக்கு புகார்

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள சிறுவன் ஒருவன் தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக முதல்வர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர்நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐ.ஜி, டிஐஜி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், மாவட் சட்ட உதவி மைய தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளான்.

சிறுவன் புகார்

அந்த மனுவில் சிறுவன் தெரிவித்துள்ளதாவது; ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அவர் எங்களை மிரட்டினார். ஆனால், போலீஸார் எங்களை கைது செய்த போது விவரத்தை கூறினேன். இளம்பெண்ணின் அலைபேசியை பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன்.

கட்டாயப்படுத்தி பாலியல் உறவு?

ஆனால், போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சென்ற பின்னரும் சிபிசிஐடி போலீஸாரிடமும் இதை தெரிவித்தேன். ஆனால், இந்த விபரத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என என்னை மிரட்டினார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிறுவர் சிறையில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். நான் 18 நாள்கள் சிறையில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மன வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவுக்கு உட்படுத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

குடோனில் நடந்த அட்டூழியம்

விருதுநகரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண் அனுபவித்த கொடுமைகள் குறித்து இந்த செய்தியில் அந்த லிங்கை இணைத்துள்ளோம்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்ய மனு அளித்து இருப்பது வழக்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website