ஆசையாக செல்பி எடுக்க வந்த ரசிகர் -கோபமாக தள்ளிவிட்டு சென்ற நடிகர் சிரஞ்சீவி-திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..

August 1, 2024 at 10:37 am
pc

சினிமா நட்சத்திரங்கள் ஏர்போர்ட் வரும்போது அவர்கள் உடன் பேச வேண்டும், செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகம் பேர் வருவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு மாற்று திறனாளியை நடிகர் நாகார்ஜூனாவின் பாதுகாவலர் தள்ளிவிட்டது பெரிய சர்ச்சை ஆனது. அதன் பின் அவர் மன்னிப்பு கோரி இருந்தார். அந்த நபரையும் நேரில் சந்தித்து பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவி இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது ஊழியர் ஒருவர் செல்பி எடுக்க பின்னால் வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமான சிரஞ்சீவி அந்த நபரை தள்ளவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிரஞ்சீவியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website