இட பிரச்சினை -பட்டப்பகலில் தங்கை மற்றும் கணவரை ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் வெட்டிய கொடூரம் …

விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூரில் உணவகம் வைத்து நடத்தி வருபவர் அரிகிருஷ்ணன். இவருக்கும் அவரது சகோதரியான ராஜ சுலோச்சனா என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அரிகிருஷ்ணனின் நிலத்திற்கு அருகே மண் எடுக்கப்பட்டது தொடர்பாக ராஜசுலோச்சானாவின் கணவர் அய்யனாருக்கும் அரிக்கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரிக்கிருஷ்ணன் தங்கை கனவரான அய்யனாரை தாக்கியுள்ளார்.
இதுக்குறித்து ராஜசுலோச்சனா மற்றும் அவரது மகன் குமார் அகியோர் அரிக்கிருஷ்ணனின் உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அரிக்கிருஷ்ணன் மீண்டும் அய்யனார் மற்றும் ராஜசுலோச்சனா அகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் உணவகத்தில் வைத்திருந்த பட்டா கத்தியை கொண்டு தம்பதியை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.
உடனடியாக அவர்களை மீட்ட மக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்ட பகலில் தங்கை மற்றும் தங்கையின் கனவரை பலரது முன்னிலையில் கத்தியால் வெட்டும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காணை காவல்துறையினர் சகோதரி மற்றும் அவரது கணவரை கத்தியால் வெட்டிய அரிகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்ம்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் – திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் தம்பதியை ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் வெட்டிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.