இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை! காதலனுடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ..

கடலுரை சேர்ந்த இளம் பெண் தனது ஆண் நண்பருடன் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது), சபரி என்கிற கிஷோர் (19) உள்ளிட்ட 3 பேர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.