கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு சாகும் வரை தூக்கு
தேனி மாவட்டம், சின்னமனூரை அடுத்துள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்வரின் மகன் சுரேஷ் என்பவர் கற்பகவள்ளி (19) கற்பகவள்ளிக்கு 14 வயதானபோதே சுரேஷ் இவரை திருமணம் செய்தார், சுரேஷ் கற்பகவள்ளி தம்பதிக்கு திவ்யசுந்தரி, மற்றும் சுந்தரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், 2015ல் சம்பவம் நடந்த போது கற்பகவள்ளி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார், கற்பகவள்ளி மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அவருக்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார், இதை தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21ஆம் தேதி சுரேஷ் கற்பகவள்ளியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.
இதையடுத்து அவரை கடுமையாக தாக்கிய சுரேஷ் கற்பகவள்ளியின் தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார், அதன் பின்பு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடியுள்ளார், கற்பகவள்ளி இறந்ததை உறுதி செய்த மருத்தவர்கள் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், பிரோத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கற்பகவள்ளியின் வயிற்று பகுதியில் பலமாக அடித்தில் அவரின் கருவும் கலைந்தது. இதை தொடர்ந்து சுரேஷின் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிருபணமாகியது, வழக்கு விசாரனை முடிவடைந்த நிலையில் நீதிபதி அப்துல் காதர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார், அதில் சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் 302 மற்றும் 316-ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது,. 302-வது சட்டப்பிரிவின் கீழ் சாகும் வரை தூக்கிலிடட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.