கல்லூரி குளியலறையில் ரகசிய கேமரா!!மர்ம நபர் பிடிபட்டது எப்படி ?

November 24, 2022 at 7:05 am
pc

மொபைலில் 2000 பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததோடு, கல்லூரி குளியலறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெங்களூருவில் கல்லூரியில் உள்ள பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராவை வைக்க முயன்ற வாலிபர் சிக்கினார். ஹொசகெரேஹள்ளியைச் சேர்ந்த சுபம் ஆசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் பிபிஏ ஐந்தாம் செமஸ்டர் படித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதற்கு முன் குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்திருப்பது போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

குளியலறையில் கேமராவை பொருத்த முயன்ற போது மாணவிகள் குற்றவாளியை பார்த்ததாக நகர போலீசார் தெரிவித்தனர். மாணவிகள் சத்தம் போட்டதும் தப்பி ஓடிவிட்டார். பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து, கிரிநகர் காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து, ​​அவர் கைது செய்யப்பட்டார். 

ஆசாத்திடம் இருந்து 1200 பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய மொபைல் கைப்பற்றப்பட்டது. அவரிடம் வேறொரு தொலைபேசி இருந்ததாகவும், அது இன்னும் மீட்கப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website