கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை.. தர்மபுரியில் துயரம்..

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவருக்கும் இவரது மனைவி சுகுணாவுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்துடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றுள்ளார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த அவரது ஒன்றரை வயதான இரண்டாவது மகள் தேன்மொழி எழுந்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில் குழந்தை நிலை தடுமாறி சாம்பார் பாத்திரத்தில் விழுந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் சுகுணா ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் குழந்தையை மீட்டு அவர் மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மாரண்டஹள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.