தண்ணீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி – கவனக்குறைவால் விபரீதம்

April 26, 2022 at 11:48 am
pc

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியார் சாலை அடுத்த தாட்கோ காலனியை சேர்ந்தவர் மரிய ஜான் (45). இவர் அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் கிரிஜா (35). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் மரிய புனிதன், பெலிக்ஸ் என்கிற இரண்டு ஆண் குழந்தையும் ஆதிரா என்கிற ஒரு பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இவர்களது மூத்த மகன் மனிதனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை அவரது தாய் கிரிஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் காண்பித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வரும் வழியில் குழந்தைகளுக்கு ஜூஸ் மற்றும் மாதுளை பழங்களை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் மூன்று குழந்தைகளுக்கும் பழங்களைப் பகிர்ந்து அளித்து விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

அப்போது அவரது இரண்டாவது மகன் ஃபெலிக்ஸ் கையில் வைத்திருந்த மாதுளம் பழத்துடன் வீட்டின் உள்ளே தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டு உள்ளார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை கையில் வைத்திருந்த மாதுளம்பழம் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

அதனை எடுக்கும் நோக்கத்தில் அந்த அரிய வயது குழந்தை தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளது. ஆனால் அந்தத் தண்ணீர் தொட்டி சரிவர மூடாமல் திறந்து கிடந்ததால் அந்த குழந்தை சென்றபோது தவறி உள்ளே விழுந்துள்ளது.

இரண்டாவது குழந்தை வெகுநேரமாக காணவில்லை என அச்சம் கொண்ட தாய் கிரிஜா வீடு மற்றும் தெரு முழுவதும் தேடி அடைந்துள்ளார். எங்கு தேடியும் அவரை காணவில்லை என்றால் என்பதால் பதத்துடன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் குழந்தை கையில் வைத்திருந்த மாதுளம்பழம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விரைந்து அந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அந்த இரண்டரை வயது பிஞ்சு மூச்சு பேச்சு இல்லாமல் தண்ணீரில் மிதந்து உள்ளது. இதனால் அவரது தாய் அலறியடித்து கத்தி கூச்சலிட்டு உள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பிஞ்சு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website