தளபதி விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை ரம்பா..!

July 18, 2024 at 6:48 pm
pc

தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தளபதி விஜய் மற்றும் ரம்பா ஆகிய இருவரும் ’மின்சார கண்ணா’ ’என்றென்றும் காதல்’ ’நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக ’மின்சார கண்ணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஊதா ஊதா ஊதாப்பூ.. என்ற பாடல் இப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் நகர் தளபதி விஜய்யை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் ’ஊதா ஊதா ஊதாப்பூ.. என்ற பாடல் தான் உங்களை பார்த்தவுடன் ஞாபகம் வருகிறது என்று பதிவு செய்துள்ளனர். நடிகை ரம்பா இந்த பதிவில் ’நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் நீங்கள் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website