தவறான சிகிச்சையால் சிகிச்சையால் பறிபோன அப்பாவி சிறுமியின் உயிர்!

November 3, 2022 at 12:03 pm
pc

சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி நந்தினி வயிற்று வலி பிரச்சனை காரணமாக மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அல்சர் பிரச்சனை இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. செவ்வாய்கிழமை இரவு செவிலியர்கள் சிறுமிக்கு ஊசி ஒன்று போட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுமி, சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட நிலையில், 6 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகளை இழந்து விட்டதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. 

மருத்துவமனையில் இருந்து பெற்றோர் ஒப்புதல் இன்றி மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதாக கூறி மாணவியின் தாய் அழுது கூச்சலிட்டார். அய்யோ ஊசி போட்டு கொன்னுட்டாங்களே” தலையில் அடித்து கதறிய தாயால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் உயிரிழப்புக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website