தென் கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை: 7 பேர் பலி.!
தென் கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர். கனமழைக்கு வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் சுரங்கப் பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், 6 பேர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள கியோங்கி மாகாணத்தில் திங்கள்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ அதிகமான கனமழை பெய்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.