மக்களே உஷார்! அம்மா உணவக சாம்பாரில் கிடந்த அரணை…

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று அதை பார்த்தபோது, அதில் அரணை என்ற விஷ ஜந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் வாந்தி எடுத்ததால் மீண்டும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.