வெறும் உடம்போடு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. வேண்டாம் என கதறிய தொண்டர்கள்!

December 27, 2024 at 11:51 am
pc

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தன்னைத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார்.

சொன்னதைப் போலவே அண்ணாமலை இன்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு மேல் சட்டை அணியாமல் பச்சை வேட்டி அணிந்து 8 முறை தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை வைத்து அடித்துக் கொண்டார். அப்போது அந்த கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வேண்டாம் வேண்டாம் என முழக்கமிட்டனர்.

மேலும் பலர் வெற்றிவேல் வீரவேல் எனவும் முழக்கமிட்டனர். வெட்கம் கெட்ட திமுக என்றும் பாஜக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்தும் திமுக அரசைக் கண்டித்தும் அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “பாஜக இன்று எடுத்துள்ள போராட்டம் வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் தனிமனிதரைக் கண்டித்து இந்த போராட்டம் இல்லை என்றும் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் குறைந்து கொண்டுள்ளது பொருளாதாரம் பின்தங்கியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. பெண்கள் குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முருகப்பெருமானிடம் தங்களின் வேண்டுதல்களை இந்த ஆறு சாட்டை அடியின் மூலம் வைத்துள்ளோம். இனி கிடைக்கும் மேடைகளில் திமுக ஆட்சியை தோலுரித்துக் காட்டப்போகிறோம். 

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. உடலை வறுத்திக்கொள்ளவில்லை, தமிழ் மண்ணின் மரபைதான் செய்துள்ளோம். சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தங்களின் நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தியை கொடுத்துள்ளதாக கமிஷனர் அருண் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கமிஷனர் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தலாமா?

எஃப்ஐஆரில் அந்த பெண்ணை பற்றி மோசமாக எழுதியுள்ளார்கள். 7 தலைமுறைக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தை பாதிக்கும். அந்த குற்றவாளி மீது முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த பெண் திருப்தி அடைந்திருப்பார். கண்ணியமான பதவியில் இருக்கும் அதிகாரி இப்படி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தை காவல்துறை அதிகாரிகள் சாதாரணமாக கடந்து செல்ல முயற்சிக்கிறார்கள்” என அண்ணாமலை தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website