ஃபோட்டோகிராஃபர்களுக்கு வேண்டுகோள் வைத்த சூர்யா !வைரலாகும் வீடியோ..
நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் வைத்து தயாரிக்கும் பணியில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் முகாமிட்டுள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் பணிக்காக மும்பை சென்றுள்ள சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் அவர்களின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் நக்மா உள்ளிட்ட குடும்பத்தினரோடு அங்குள்ள பிரபல உணவகத்தில் ஒன்றாக உணவருந்தியது தற்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரவு உணவிற்குப் பிறகு இயல்பாக வெளியே வந்த சூர்யா ஜோதிகா குடும்பத்தினரை மும்பை ஃபோட்டோகிராஃபர்கள் புகைப்படம் எடுக்க காத்திருந்தனர். அப்போது தன்னையும் தனது மனைவியையும் மட்டும் படமெடுக்குமாறு புகைப்படக்காரர்களிடம் கேட்டுக் கொண்ட சூர்யா, குழந்தைகளின் பிரைவசியை மதிக்கும்படி வேண்டுகோள் வைத்தார்.
அதனை போட்டோகிராபர்களும் ஏற்றுகொள்ள தனது குழந்தைகளை காரில் ஏற்றிவிட்டு சூர்யா, ஜோதிகாவும் புகைப்படகாரர்களுக்கு போஸ் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.