அங்காடிதெரு ஹீரோவின் பரிதாப நிலை!வாழ்க்கை சீரழிந்ததற்கு இதுதான் காரணம்…

May 23, 2023 at 7:16 am
pc

நடிகர் மகேஷ் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து வருத்தமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் மகேஷ்

அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகேஷ். முதல் திரைப்படமே இவருக்கு பெரும் அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால், அதற்குபின் அவர் என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை.]

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேடி வந்த பல நல்ல கதைகளை நான் மிஸ் பண்ணி விட்டேன். அதுவும் நடிகர் அதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் கேட்டாங்க,

வேதனை

அதுபோல சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேரக்டரும் எனக்கு தான் வந்தது, அதுமட்டுமல்லாமல் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதையெல்லாம் நான் தவற விட்டு விட்டேன். இது போன்ற நல்ல வெற்றி பெற்ற பல திரைப்படங்களை நான் மிஸ் செய்து விட்டேன். நான் தேர்வு செய்து நடிக்க எந்த படமும் சரியாக வெற்றிப் பெறவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். 

அதுபோல அங்காடித்தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய கேரியர் வீணாகப் போய்விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website