அங்காடித் தெரு நடிகை மார்பக புற்றுநோயால் அவதி- கண்ணீர் பேட்டி!

February 25, 2023 at 1:13 pm
pc

2010 ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகிய அங்காடித் தெரு படம் பலரையும் கவர்ந்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சிந்து. கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைக்கு உதவி வேண்டும் என கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். பல திரைப்பிரபலங்களும் அவருக்கு உதவி வழங்கினர்.

இந்நிலையில் நடிகை சிந்து அண்மையில் அளித்த பேட்டியொன்றில், “முதல் முறை நோயின் வீரியம் அதிகமாக இருந்து, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன். கீமோ தெரபி சிகிச்சை பெற்று வந்தேன்.

நாட்டு மருத்துவம் மூலமாக ஐம்பது வீதம் குணமானேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வந்தேன். 48 நாட்கள் சிகிச்சைக்கு இருக்க வேண்டியது, 38 நாட்களில் திரும்பி வந்தேன். கீமோ தெரபி செய்ததினால் எனது கை நரம்புகள் செயலிழக்க ஆரம்பித்தன.

வலது புற மார்பகம், புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டதால் அதனால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. அதனால் ஏற்பட்ட வலது கை வீக்கம் இன்னும் உள்ளது. இதோடுதான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக எனது நண்பர்கள், பொதுமக்கள் உதவியால் சமாளித்து வந்தேன்.

அண்மையில் ஒரு சீரியலில் ஒப்பந்தமானேன். ஆனால், சில ஒவ்வாமை காரணமாக இந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன். எனது இன்னொரு பக்க மார்பகத்திலும் புற்றுநோய் பரவியுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன் ஸ்கேன் எடுக்க வேண்டும். எனது வலி, வேதனை யாருக்குமே தெரியாது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது.” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website