அசத்தலான ஆலு சப்ஜி செய்யலாமா ?
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு: 1/4 கிலோபெரிய வெங்காயம்: 2தக்காளி: 2பச்சை மிளகாய்: 2 நீளவாக்கில் அரிந்ததுமஞ்சள் தூள்: 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்: 1 டேபிள் ஸ்பூன் தனியாத் தூள்: 1 டேபிள் ஸ்பூன்உப்பு: தேவைக்கேற்ப சமையல் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்கடுகு : தாளிக்க தண்ணீர்: 2 கப்
செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கை கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைநீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக அரிந்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அதில் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் அதில்மசித்த உருளைக் கிழங்கு தக்காளித்துண்டுகள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத் தூள் உப்புமுதலியவற்றை சேர்க்கவும். பிறகு உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொத்தமல்லியைத் தூவி இறக்கி வைக்கவும். பூரி சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாகஇருக்கும். ஆறியவுடன் சிறிது கெட்டிப்படும். மறுபடியும் நீர் சேர்த்துகொதிக்க வைக்கலாம்.