அசத்தலான சுவையில் மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி தயார் …!!
தேவையானபொருட்கள்
காளான் – ஒரு பாக்கெட்
பச்சை அரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – 3 கப்
அவல் – ஒரு மேசைக்கரண்டி
உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது – அரை கப்
இஞ்சி – ஒரு அங்குலம்
பச்சை மிளகாய் – 3
தக்காளி பேஸ்ட் – அரை கப்
டோபு – 100 கிராம்
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 7
பூண்டு – 5 பல்
மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
புதினா – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
எல்லா வகை அரிசி, உளுந்து, அவல் மற்றும் வெந்தயத்தை 6 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை 10 முதல் 12 மணி வைத்து புளிக்க விட வேண்டும்.
சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, 2 பச்சை மிளகாய், மிளகாய் தூள் எல்லாவற்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட், புதினா, கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக துருவிய டோபு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.
ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கால் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும். சுவையான சத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.