அசுர வேகத்தில் பரவும் குரங்கம்மை தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 681 ஆக உயர்வு!

July 24, 2022 at 8:43 am
pc

கனடாவில் குரங்கம்மை தொற்று அதிகரித்துவரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 680-ஐ கடந்துள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கியூபெக்கில் மாகாணத்தில் 331 பேருக்கும், ஒன்ராறியோவில் மாகாணத்தில் 288 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 48 பேருக்கும், ஆல்பர்ட்டாவில் 12 பேருக்கும் மற்றும் சஸ்காட்செவானில் இருந்து இரண்டு பேருக்கும் குரங்கம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மூலோபாய பதிலின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக மாகாண மற்றும் பிராந்திய பொது சுகாதாரப் கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், மாகாணங்களும் பிரதேசங்களும் அவற்றின் தனித்துவமான சூழ்நிலைகளின் அடிப்படையில் நோய்த்தடுப்புத் திட்டங்களைத் தீர்மானிக்கின்றன என்றும் PHAC கூறியது.

PHAC-ன் கூற்றுப்படி, ஜூலை 18 வரை, கனடாவில் குரங்கம்மை தோற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான கியூபெக், அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு 12,553 டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. பெரும்பாலான கியூபெக் பிராந்தியங்கள் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்திவருகின்றன.

குரங்கு பல்வேறு வழிகளில் பரவுகிறது. தொற்று சொறி, சிரங்குகள் அல்லது உடல் திரவங்கள், நீண்ட நேரம், நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும் போது அல்லது முத்தம், அரவணைப்பு அல்லது உடலுறவு போன்ற நெருக்கமான உடல் தொடர்புகளின் போது சுவாச சுரப்புகளின் நேரடி தொடர்பு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website