அஜித்தின் குட் பேட் அக்லி டீம் திடீரென சென்னைக்கு திரும்பியது ஏன்?

அஜித் நடித்துவந்த விடாமுயற்சி படம் பல்வேறு சிக்கல்களால் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.
இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது படக்குழு சென்னைக்கு திரும்பி இருக்கிறது. சண்டை காட்சி தான் படமாக்கப்பட்டதாகவும், ஷூட்டிங் முடிந்துவிட்டதால் தான் படக்குழு திரும்பி வந்திருக்கிறாதாம்.
அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு என்பது பற்றி விரைவில் தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.