“அஜித்துக்கு முன்னாடியே ஓட்டு போட வந்துட்டேன்” – ஆதங்கமாக பேசிய முதியவர்!

April 20, 2024 at 10:34 am
pc

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் வருகை தந்து வாக்களித்த நிலையில், அவருக்கு முன்பாகவே நான் வந்துவிட்டேன் என்று முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். பின்னர், அங்கு காத்திருந்து முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகர் அஜித்குமார் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு முதல் ஆளாக வாக்களித்த நிலையில் முதியவர் ஒருவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர், நடிகர் அஜித் குமாருக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு தான் வந்ததாகவும், ஆனால் உள்ளே அவர் முதலில் சென்று விட்டார் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், பொலிஸார் அந்த முதியவரை சமாதானப்படுத்திய பின்பு தனது வாக்கினை செலுத்தி விட்டுச் சென்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website