அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு இந்த ஒரு பொருளை விளக்கெண்ணையுடன் சேர்த்து தடவினாலே போதும்…!!
விளக்கெண்ணையை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. இந்த விளக்கெண்ணை ஆமணக்கு என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது நமக்கு தெரிந்த விஷயமே. முடியை வளரச் செய்வதில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது இந்த எண்ணெயே. சிலருக்கு இதன் வாசனை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது.
உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருந்தாலும், நானும் எல்லாமே பண்ணிட்டு இருக்கேன் முடியே வளர மாட்டீங்கிதுனு நினைப்பவர்களும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்க. நீங்க நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு முடி வளர்ச்சி அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். இதை ஆண்களும் பயன்படுத்தலாம்.
1 ஸ்பூன் – விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் – செம்பருத்தி பொடி, 2 ஸ்பூன் – கற்றாழை ஜெல் மூன்றையும் ஒரு பவுலில் சேர்த்து கலந்து மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ளவும். பின்னர் அந்த கலவையை ஹேர் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு போட்டு முடியை அலசி விட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதை முயற்சிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். அதுமட்டுமல்லாமல், தலைமுடியில் இருக்கக் கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வளிக்கும்.