அடுத்த படத்துலையும் அவரே தான் ஹீரோ -பிரதீப் ரங்கநாதன்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிதமான வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவில் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களில் 14 கோடி ரூபாய் அளவுக்கு படம் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரதீப்தான் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.