அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை!

November 15, 2022 at 11:46 am
pc

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும். இந்நிலையில், மழை பெய்யும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website