அட்டகாசமான மணமணக்கும் மட்டன் சுக்கா …!

தேவையான பொருட்கள்:
மட்டன் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 2 டேபிள்
ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி!!!
குறிப்பு:
தேவைப்பட்டால் தக்காளியை ஒன்று அல்லது இரண்டு சேர்த்து கொள்ளலாம்மட்டனை போட்டு நன்றாக வறுத்து இறக்கும்போது மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கழித்து இறக்கவும். நன்கு ட்ரையாக வரும்வரை வைத்திருந்து பிறகு இறக்க வேண்டும்மட்டன் சுக்காவிற்கு எலும்பில்லாத ஆட்டுக்கறியைத் தேர்வு செய்யவும்.(விருப்பமுள்ளவர்கள் மல்லி தூள், மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி 2½ ஸ்பூன்