அட்டகாசமான மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்து சுவைத்துப் பாருங்கள்…!!
தேவையானபொருட்கள் :
பாசுமதி அரிசி – 2 டீஸ்பூன்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழ கூழ் – 1/2 கப்
மாம்பழ துண்டுகள் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை
கண்டென்ஸ்டு மில்க் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் – தேவைக்கு
மாம்பழம் – சிறிது
ஏலக்காய் – 1 சிட்டிகை
செய்முறை :
பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். பாதாமை துருவி வைக்கவும்.
1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து வைக்கவும். பால் சற்று சுண்ட வேண்டும்.
அடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரி, பாதாம், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி..