அட கொடுமையே – தந்தை பலாத்காரம் செய்ததை ரகசிய வீடியோ எடுத்து நீதி கேட்கும் மகள்!
பீகார் மாநிலத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 50 வயதுடைய நபர், தான் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையின் நடத்தையை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று எண்ணிய மகள் பலாத்காரம் செய்யும் போது ரகசிய கேமராவை வைத்து வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மகள் தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை படம்பிடித்து, நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.