அதிகம் டீகுடிப்பவரா..? டீயால் ஏற்படும் 5 தீமைகள் என்னென்னு உங்களுக்கு தெரியுமா..?

July 1, 2022 at 3:03 pm
pc

காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு.
ஆனால், அதிகமாக தேநீர்(டீ ) குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை.
நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் உங்களை நெருங்கும். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அப்படி அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி பார்ப்போம்

தூக்கக் கோளாறு

தேநீரில் (டீ ) உள்ள காஃபின்அதிகமாக எடுத்துக் கொண்டால் லேசான டையூரிடிக் விளைவுக்கு வழிவகுக்கின்றது. இது தூக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும்.

மலச்சிக்கல்

தேநீரில்( டீ ) தியோபிலின் என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. அது செரிமானத்தின் போது நீரிழப்பை ஏற்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.
காலையில் தேநீர் உட்கொள்வது மலம் எளிதில் வருவதுக்கு என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் அதிக அளவு தேநீர் குடிப்பது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

கருச்சிதைவுக்கானசாத்தியம்

கர்ப்பிணி பெண்கள் தேயிலை (டீ ) முழுவதுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதன் காஃபின்(caffeine) உள்ளடக்கம் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கருச்சிதைவு அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

கவலை மற்றும் அமைதியின்மை

Caffeine மனநிலையை மேன்படுத்த அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகும், மேலும் இது நம் உடலில் சில நல்ல மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தேநீர் அதிகமாக உட்கொள்வது தூக்கக் கோளாறு, அமைதியின்மை, பதட்டம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றது.

முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்

அதிகமாக உட்கொள்வது இரும்பு(Iron) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும்.” சில ஆய்வுகள் கருப்பு தேயிலை இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கும் என்று காட்டுகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website