அதுக்குன்னு இப்படி அடிச்சி தள்ளக்கூடாது …பயணியை காலால் எட்டி உதைத்த கண்டக்டர் – கொந்தளித்த மக்கள்…
கர்நாடாகா: தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்ற போது, பயணி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியப்படி பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் கண்டக்டராக இருந்த சுக்ராஜ் ராய், அந்த பயணியை பஸ்சில் ஏறவிடாமல் தடுத்து அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினார். இதனை அந்தப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து கண்டக்டர் சுக்ராஜ் ராய் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.