அந்த இடத்தை நக்கச் செய்து மருமகளை கொடுமைப்படுத்திய மாமனார்!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா, சாந்தினி பாக் தம்பதி. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், வரதட்சணை போதவில்லை எனக்கூறி, திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இழிவாக நினைத்த திவ்யான்ஷின் பெற்றோர், அதற்கு தண்டனையாக மருத்துவமனையிலேயே கணவனின் காலை நக்கச் செய்து, மருமகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கித் தரவில்லை எனில் கணவருடன் தங்க அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக சாந்தினி பாக் அளித்த புகாரின் பேரில், கணவர் திவ்யான்ஷ் குப்தா, மாமனார் நாகின் குப்தா, மாமியார் பிரமிளா மற்றும் மைத்துனர் நூபுர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.