அந்த சிந்தனை அதிகமாகி விட்டது… குழந்தை கொலை, தாய் எடுத்த விபரீத முடிவு..!அதிர்ச்சி காரணம்…

August 23, 2022 at 6:13 pm
pc

பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் நரேந்திரன் – காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் சமியுக்தா என்ற பெண் குழந்தையும் இருந்தார். இந்நிலையில், நரேந்திரனின் பெற்றோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் நிலையில் நரேந்திரனின் தாய் சில நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் நரேந்திரனின் குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கிய நிலையில், நரேந்திரன் தமிழ்நாட்டில் இருக்கும் தனது தந்தையை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

அதன்படி, தமிழகம் சென்ற நரேந்திரன் மீண்டும் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை பெங்களூருவுக்கு வந்தார். 4.30 அளவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. காயத்ரியிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நரேந்திரன் கதவுடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மனைவியும், மகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை சமியுக்தா ஏற்கனவே இறந்துவிட்டததாக தெரிவித்துள்னர். மனைவி காயத்ரியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நரேந்திரனின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, காயத்ரி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், எனக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகமாகி விட்டதாகவும், சிறிய பிரச்சினைகளைக்கூட சமாளிக்க தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த காயத்ரி, நான் இறந்த பிறகு குழந்தை அனாதையாகிவிடும் என்பதால் குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக எழுதியிருந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website