அனிருத்தின் தாத்தா பிரபல இயக்குநர் எஸ்.வி. ரமணன் மரணம்
பிரபல இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி. ரமணன். தந்தை வழியில் இயக்குநரான அவர் ரேடியோ, டிவி விளண்பர உலகில் சிறந்து விலங்கினார்.
குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி உள்ளிட்டோரை வைத்து உறவுகள் மாறலாம் என்ற படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்திருந்தார் ரமணன். அவர் ஆவண படங்கள், சீரியல்களையும் இயக்கியிருக்கிறார்.
ரமணனுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் தாத்தா தான் ரமணன். தன் பேரன்களான அனிருத், நடிகர் ரிஷிகேஷின் படைப்புகளை பார்த்து பெருமைப்பட்டவர் ரமணன்.
முன்னதாக அனிருத் பற்றி ரமணன் கூறியதாவது,
தென்னிந்தியாவில் இருக்கும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ஆனால் தான் ஒரு பெரிய பிரபலம் என்பதையே உணராமல் அவர் இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது.
பிரபலம் என்கிற மமதை அனிருத்துக்கு இல்லை. தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து வருகிறார் அனிருத்.
மற்றொரு பேரனனான ரிஷிகேஷ் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவரும் தலைக்கனம் இல்லாதவர். மிகவும் திறமையானவர் என்றார்.