அபாய எச்சரிக்கை -பஞ்சத்தால் சிறுவர்கள் பட்டினியில் வாட போகும் காலம் வந்துவிட்டது.

June 25, 2022 at 3:46 am
pc

கனடாவில் சிறுவர்கள் பட்டினியில் வாட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துச் செல்லும் மளிகை பொருட்களின் விலைகள் காரணமாக எல்ல உணவு வேளைகளிலும் உணவு உட்கொள்வது சிலருக்கு சவாலாகியுள்ளது. தங்களது மளிகைச் செலவுகள் இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது எனவும் இதனால் வாடகை செலுத்த முடியாதுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சிறுவர்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வரும் நிலையிலும், பலர் உணவு உட்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய உணவு வங்களில் பெருமளவில் தங்கியிருப்பவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website