அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும்முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு கல்யாணம் ஆகிடுச்சாமே!

October 7, 2022 at 9:22 pm
pc

ஐஸ்வர்யா ராய் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் சல்மானுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். திடீரென அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனுடன் திருமணம் என அறிவிப்பு வந்தது. இப்ப அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்பாகவே வேறொரு திருமணம் நடந்தது என அந்த சமயத்திலேயே கதை நிலவியது. அந்த கதை என்ன தான் ஆனது. ஐஸ்வர்யா அப்படி அபிஷேக்கிற்கு முன் யாரை தான் திருமணம் செஞ்சிக்கிட்டாங்க… வாங்க பார்க்கலாம்

​ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் சந்திப்பு

பிரபஞ்ச அழகியான ஐஸ்வர்யா ராய் நடிக்கத் தொடங்கிய ஒரு சில படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். அதேபோல பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தமு. உம்ராவ் ஜான் என்னும் படத்தில் நடித்த இவர்கள் அதைத் தொடர்ந்து குரு, தூம் 2 ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தார்கள். அப்படி தான் இவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது. 

​அபிஷேக் செய்த ப்ரபோஷல்

குரு படம் வெளியான சமயத்தில் அபிஷேக்கிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் மலர, அதை டொரண்டோவில் வைத்து ஒரு அழகான மோதிரத்தைக் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் அபிஷேக்.

அதுக்கு ஐஸ்வர்யா ராய் என்ன ரியாக்ட் பண்ணினாங்க தெரியுமா? என்ன பண்ணுவாங்க… ஓகே தான் சொன்னாங்களாம். 

​அமிதாப் – ஜெயா சம்மதம்

இந்த காதல் ஜோடிகளின் அடுத்த திட்டம் அபிஷேக்கின் பெற்றோரான அமிதாப் பச்சன், ஜெயா பச்சனின் அனுமதியை பெறுவது தான்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் காலில் விழுந்து சம்மதத்தை வாங்கி விட்டாராம் அபிஷேக். 

​பிரமாண்ட திருமணம்

பெற்றோரின் சம்மதத்தை வாங்கியதும், இவர்கள் இருவரும் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிக பிரமாண்டமாக மும்பையில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என கூட கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்பட்டது.

ஐஸஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் இருவருமே மிகப்பெரிய பாலிவுட் பிரபலங்களாக இருந்ததால் அந்த திருமண பிரமாண்டத்தின் மீது தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையுமே இருந்தது என்று சொல்லலாம். 

​அபிஷேக்கிற்கு முன் ஐஸ்வர்யா திருமணம்

இந்த சமயத்தில் தான் உலகின் பெரும்பாலான ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏற்கனவே ஒரு திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான்.

இதுகுறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலவிய போது இந்த கேள்விக்கான விடையும் கிடைத்தது. 

​ஜோதிடர் அறிவுரை கூறியதால் செய்யப்பட்ட திருமணம்

ஜாதக ரீதியாக சில பெண்களுக்கு சில தோஷங்கள் இருப்பது வழக்கம். அதனாலும் கூட திருமணங்களை தடைபடும். திருமணத்தில் பிரச்சினைகள் எழலாம் போன்ற பல விஷயங்கள் சொல்லப்படுவது உண்டு. அப்படி ஒரு தோஷததிற்கு பரிகாரம் செய்த பின்பு ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்வது நல்லது என ஜோதிடர் சொல்லவே, ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இரண்டு வீட்டாரும் வாரணாசிக்குச் சென்று இந்த சடங்கு திருமணத்தை (கும்ப விவாகம்) நடத்தியிருக்கிறார்கள். 

​மாங்கல்ய தோஷ திருமணம்

மாங்கல்ய தோஷத்தைக் கழிபபதற்காக வாரணாசியில் கும்ப விவாகம் நடத்தப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா ராயை அமர வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, பின் ஒரு சிறிய மரத்திற்கு தாலி கட்ட வைத்தார்கள்.

இந்த திருமணம் பற்றி ஊர் முழுக்க பேச்சாக இருந்தது. இதுகுறித்து அந்த சமயதத்தில் ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி அமிதாப் பச்சனும் ஊடகங்களுக்கு நிறைய விளக்கங்களைக் கொடுத்து சர்ச்சையை முடித்து வைத்தார்கள்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website