அம்மா -அப்பா அடிக்கடி சண்டை போடுவதால் மனமுடைந்து மகன் தற்கொலை..துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை…!!

February 23, 2023 at 7:04 pm
pc

மகன் தற்கொலை செய்துக்கொண்ட சோகத்தில், தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சின்னகற்பூரம் பட்டியை சேர்ந்தவர் அழகன். இவர் மேலவளவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி நாச்சம்மாள்.

அழகன் – நாச்சம்மாள் தம்பதியினருக்கு தமிழ்வாணன் என்ற மகன். இவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் மூவரும் மேலூர் காந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

அழகனுக்கும், அவரது மனைவி நாச்சமாளுக்கும்  இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் மகன் தமிழ்வாணன் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். பலமுறை தமிழ்வாணன் தன் அம்மா மற்றும் அப்பாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாய் நாச்சம்மாள் மற்றும் தந்தை அழகன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். தேர்விற்கு படித்துக் கொண்டிருந்த தமிழ்வாணன் இதன்காரணமாக அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது வீட்டில் அங்கிருந்த கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் நாச்சம்மாள் மற்றும் அழகன் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அதிர்ச்சியும் துக்கமும் தாளாமல், அழகன் வீட்டினுள் சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் விரைந்துவந்து இருவரது உடலையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனஇருவரின் தற்கொலைக்கும் குடும்ப பிரச்சினை மட்டும்தான் காரணமா? வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website