அரசியலுக்கு வரும் திரிஷா!
நடிகை திரிஷா திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் இதற்கு முக்கியமான காரணம் இவருடைய ஜாதக அமைப்புதான் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜாதக பொருத்தம் பார்க்காமலே தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் நடிகை திரிஷா. அதன் பிறகு ஜாதகம் பொருத்தம் பார்த்த தயாரிப்பாளர் வருண்மணியன் குடும்பத்தார் பதறியடித்துக்கொண்டு இது திருமணத்தை நிறுத்தி விட்டனர் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் திருமணத்தின் மீதே ஒரு வெறுப்பில் இருக்கிறாராம் நடிகை திரிஷா. தற்பொழுது தனக்கு 40 வயது ஆகிவிட்ட காரணத்தினால் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியாது. அப்படியே படித்தாலும் ஹீரோயினாக பயணிக்க முடியுமா..? என்பது கேள்விக்குறிதான்.
எனவே, நடிகை திரிஷா அரசியலில் இறங்கி தன்னுடைய பங்களிப்பை கொடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். காரணம் நடிகை திரிஷாவின் ஜாதகம்தான். இவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் அடைந்து இருக்கின்றது.
அரசியலில் முறையான ஆலோசனைகளுடன் நடிகை திரிஷா பயணிப்பார் ஆனால் அரசியலில் இவருக்கு நல்ல வரவேற்பு மற்றும் சிறந்த ஆளுமையாக முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள்.