ஆசனவாயில் வெடிகுண்டுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர்… அலறியடித்து ஓட்டம் பிடித்த நோயாளிகள்

December 21, 2022 at 12:08 pm
pc

பிரான்சில், ஆசனவாயில் வெடிகுண்டு ஒன்றுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பான மருத்துவமனை

கடந்த சனிக்கிழமை இரவு, பிரான்சின் Toulon நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு வந்த நபர் கூறிய விடயத்தால், சில நொடிகளில் மருத்துவமனையே பரபரப்பானது.

தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்ததாகவும், அதை திரும்ப எடுக்க முடியவில்லை எனவும் அவர் கூற, அது என்ன பொருள் என பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அது, பிரெஞ்சு இராணுவம் முதல் உலகப்போரின்போது பயன்படுத்திய ஒரு வெடிகுண்டு!

உடனே பதறிப்போன மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். சிறுவர் வார்டுகள் உட்பட பல வார்டுகளிலிருந்த நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.

மருத்துவர்கள் சந்தித்த சிக்கல்

பிரச்சினை என்னவென்றால், அந்த நபர் அந்த வெடிகுண்டை எளிதாக ஆசனவாயில் நுழைத்துவிட்டார். ஆனால், அதை எளிதாக வெளியே எடுக்க முடியவில்லை.

ஆகவே, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த நபரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துதான் அந்த வெடிகுண்டை எடுக்கமுடிந்தது.

இந்த விடயம் அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த நோயாளி நல்ல நிலைமையில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் எதற்காக அந்த வெடிகுண்டை தனது ஆசனவாய்க்குள் நுழைத்தார் என்பதை கடைசிவரை அவர் கூறவேயில்லை! 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website