ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகர்: உங்களை இப்படிப் பார்க்கத் தான் விரும்புறேனு சொன்ன சர்ச்சை நடிகை…

July 31, 2022 at 4:52 pm
pc

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் பத்திரிகை ஒன்றுக்காக ஆடையில்லாமல் போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இதையடுத்து பெண்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக ரன்வீர் சிங் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ரன்வீர் சிங்கை பலரும் கிண்டல் செய்தார்கள்.

இந்நிலையில் பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த் ரன்வீர் சிங் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

நான் இப்பொழுது தான் துபாயில் இருந்து நாடு திரும்பினேன். நாடு திரும்பியதில் இருந்து ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்தது பற்றி தான் அனைவரும் பேசுகிறார்கள். பல பெண்கள் கேமராவுக்கு முன்பு பிறந்தமேனியாக போஸ் கொடுக்கிறார்கள்.

ஆடையில்லாமல் போஸ் கொடுத்து நம் நாட்டு பெண்களுக்கு நல்லது செய்திருக்கிறார் ரன்வீர் சிங். எங்களின் கண்களும், இதயமும் சாந்தி அடைந்துவிட்டது.

அவர் ரொம்ப ஹேன்ட்சமாக இருக்கிறார். மை டியர் நண்பா ரன்வீர், நீங்கள் எங்கிருந்தாலும் இது போன்ற போட்டோஷூட்டுகளை தொடர்ந்து செய்யவும். உங்களை இப்படிப் பார்க்கத் தான் விரும்புகிறேன் என்றார்.

நடிகைகள் ஆலியா பட், ஸ்வரா பாஸ்கர், வித்யா பாலன் உள்ளிட்டோரும் ரன்வீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website