ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி: இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு!

July 10, 2024 at 7:01 pm
pc

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்ட அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வருமான வரித்துறை (IRS) வரலாற்றில் முதல் முறையாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது பெயர் மற்றும் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள இந்திய மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்களுக்கான நுழைவு வாரியம், மற்றும் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னதாக கூட்டு ஆணையராக பணியாற்றிய எம். அனுசுயா(M Anusuya) அவர்கள் இனி அதிகாரப்பூர்வமாக எம். அனுகதீர் சூர்யா(M Anukathir Surya) என அடையாளம் காணப்படுவார் என தெரிவித்துள்ளது.

சென்னையில் உதவி ஆணையராக (2013) தனது பணியைத் தொடங்கிய சூர்யா, 2018ம்ப ஆண்டு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளங்கலை பட்டமும், சைபர் சட்டம் மற்றும் சைபர் குற்றவியல் துறையில் முதுநிலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது.

இத்தீர்ப்பில், ஒரு நபர் மருத்துவ முறைகளுடன் தனது பாலின அடையாளத்தை ஒத்துப்போகும் வகையில் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டால், அதை அங்கீகரிப்பதில் எந்த சட்டத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவு இந்த உணர்வை பிரதிபலிக்கிறது, மேலும் இந்திய சிவில் சேவையில் எதிர்காலத்தில் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website