ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா!

October 24, 2024 at 7:57 pm
pc

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது. தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

கோதுமையுமன் ஒப்பிடுகையில் காளான்களில் 12 மடங்கு அதிகமாக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இருப்பதால், இது இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் அது மாரடைப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட களானை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் காளான் மிளகு மசாலா எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு 

பட்டை – 1 

ஏலக்காய் – 2

கிராம்பு – 4 

மிளகு – 1 1/2 மேசைக்கரண்டி 

சோம்பு – 1 தே.கரண்டி 

சீரகம் – 1 தே.கரண்டி

வரமிளகாய் -3

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி 

சோம்பு – 1 தே.கரண்டி 

கறிவேப்பிலை – 1 கொத்து 

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

காளான் – 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்) 

தண்ணீர் – 1/2 டம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூமானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி, ஆறவிட வேண்டும். 

பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி, அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கிளறி விட்டு, அதனுடன் காளானையும் சேர்த்து நன்றாக மூடி வைத்து வேகவிட வேண்டும். 

நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த களான் மசாலா தயார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website