“ஆண்களே உஷார்” – வெளியான எச்சரிக்கை செய்தி!

December 20, 2022 at 7:28 am
pc

புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப் விற்பனை செய்தாலோ பொதுமக்கள் அதனை புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை பார்க்கும் அந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website