ஆந்திராவில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் பலி!
ஆந்திராவின் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது உயர்மின் அழுத்த மின்கம்பி விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாடிமரி அருகே கொண்டபள்ளியில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்த கோர விபத்தில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. இதில், ஆட்டோவில் பயணித்த விவசாய தொழிலாளர்கள் 8 பேரும் உடல்கருகி பலியாகினர்.
அதே சமயம், விபத்தில் சிக்கிய ஒருவரை மட்டும் போலீசார் மீட்டனர். தீக்காயம் அடைந்த லட்சுமி என்ற பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மின்கம்பி அறுந்து விழுந்த வேளையில், ஆட்டோவில் இருந்து ஓட்டுநர் குதித்தால் உயிர்தப்பினார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.