ஆனந்த அம்பானியின் திருமணம்: மார்க் ஜுக்கர்பெர்க் வியந்த ஆடம்பரத்தின் உச்சம்!

March 4, 2024 at 3:25 pm
pc

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் சமீபத்திய இந்திய தொழில் அதிபர் ஆனந்த் அம்பானியின் கையில் இருந்த அதிசய கடிகாரத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர். 2024ல் ஜூலை 12-ம் திகதி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின்(mukesh ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani), தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும்(Radhika Merchant) திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தின் முந்தைய நிகழ்வாக ஜாம்நகரில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில், உலக பணக்காரர்களான மார்க் ஜுக்கர்பெர்க் – மெட்டா நிறுவனர் (Mark Zuckerberg – Meta), முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S தோனி(M.S Dhoni) வரை கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவின் மத்தியில், இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் மற்றும் மணமகனான ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் வியந்து பார்த்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அத்துடன் அந்த வீடியோவில், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் உரையாடி கொண்டு இருப்பதும், அப்போது இருவரும் ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை வியந்து பார்த்து விவாதித்ததை பார்க்க முடிகிறது.

ஆனந்த அம்பானி அணிந்து இருந்த இந்த Audemars Piguet Royal Oak Openworked Skeleton கடிகாரம் சுமார் ₹14 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website