ஆன்லைன் ரம்மிவிளையாட்டால் அதிகரிக்கும் தற்கொலைகள்- வாலிபர் தற்கொலை

February 10, 2023 at 10:29 am
pc

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆன்லைன் ரம்மியில், பணத்தை இழந்த இளைஞர் ரியாஸ்கான் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அவர், தான் சம்பாதித்த பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website