ஆன்லைன் ரம்மி: வாலிபர் தற்கொலை

January 11, 2023 at 4:59 pm
pc

நெல்லை மாவட்டம் பணகுடி, ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் சில நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தந்தையிடம் பணம் வாங்கியும், கடன் வாங்கியும் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் விஷமருந்தி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website