ஆபாச படங்களை பார்.. அந்த உடைகளை உடுத்து.. மனைவிக்கு டார்ச்சர்
கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு பிறகு வரதட்சணை கேட்டு மனதளவிலும், உடலளவிலும் கணவர் துன்புறுத்தியுள்ளார்.
பின்னர் ஆபாச படங்களை பார் என்றும், ஆபாச படங்களில் வருவதை போல உடைகளை அணிந்து வந்து நிற்கவேண்டும் என்றும் கணவர் கொடுமைப்படுத்தியுள்ளர்.
நீண்ட நாள்களாக கணவர் வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும், உடல் மற்றும் மனதளவில் தான் பெரிதும் பாதித்ததாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று துணை ஆணையர் ரோகித் மீனா கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதாகவும் துணை ஆணையர் கூறியுள்ளார்.