ஆளுநர் மீது 15 பக்க புகார்! குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்

July 10, 2023 at 10:27 pm
pc

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து 15 பக்க கடிதத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்பதை சுட்டிக்காட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தமிழக முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆளுநரின் சமீபத்தில் நடவடிக்கைகள் மேலும் பரபரப்பை கிளப்பவே, கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ஆளுநருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்காமல் இருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ள நிலையில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website