ஆளுனருடன் திடீர் சந்திப்பு, ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறாரா?

August 8, 2022 at 3:11 pm
pc

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததால் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. 

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என ஆளுநர் ரவி கூறினார். அவருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அரசியல் குறித்து விவாதித்தோம், ஆனால் அதை உங்களிடம் தற்போது கூற முடியாது’ என தெரிவித்துள்ளார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website