ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் அதன் தாக்கத்தை குறைக்க குடிக்க வேண்டிய பானம் என்ன …?
காற்று மாசுபாடு, மோசமான சுற்றுச்சூழல், தூசிகள் ஆகியவற்றின் காரணமாகவும் நுரையீரலில் தேங்கும் அதிகப்படியான மற்றும் நாள்பட்ட சளியின் காரணமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகள் உண்டாகும். இந்த ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் குளிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
என்ன தான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அதன் அறிகுறிகள் குளிர்காலத்தில் அதிகமாகவே இருக்கும். இவற்றை சரிசெய்ய வீட்டிலுள்ள சில இயற்கையான மூலிகைப் பொருள்களைக் கொண்டு சில பானங்களை செய்து அருந்துவதால் குளிர்காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.
ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கம், சுவாசப் பாதை குறுக்கத்தினால் மூச்சுத் திணறல்கள் ஏற்படுவதுண்டு.
இஞ்சியும் அதிமதுரமும் :
தேவையான பொருள்கள் :
அதிமதுரம் – 1 ஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
தண்ணீர் – 1 கப்
செய்முறை :
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் இஞ்சியைத் தோல் சீவி விட்டு துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியின் சாறு நன்றாக நீருக்குள் இறங்கியதும் அதில் அதிமதுரப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். வேராக இருந்தால் நன்றாக இடித்துச் சேர்த்துக் கொள்ளவும்.
இதை நன்கு கொதிக்க வைத்து டீயாகக் குடிக்கலாம். அதிமதுரத்தில் ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் அதிகம். இந்த டீயை தினமும் ஒரு முறையாவது குடித்து வர ஆஸ்துமா அறிகுறிகள் குறையும்.