இஞ்சி டீ பிரியரா நீங்கள்? இனி அதிகமா குடிக்காதீங்க ஆபத்தாம்
அசைவ உணவுகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை, பலரும் டீயுடன சேர்த்து விரும்பி அருந்துவார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிகளவு இஞ்சி டீ குடித்தால் உடலுக்கு தீமைகள் ஏற்படும்.
உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சியில் சில தீமைகளும் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இஞ்சி டீ-யினால் என்னென்ன தீமைகள்?
வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருந்து மாத்திரை எடுக்கும் போது இஞ்சி டீயை அருந்தக் கூடாது. ஏனெனில் மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
அன்றாடம் அதிகமாய் இஞ்சி டீ குடித்தால், நாக்கில் அரிப்பு, எரிச்சல், வாய்ப்புண், வயிறு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே குறைவான ரத்த அழுத்தம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்தும்.